மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மற்றவர்கள் இயக்கிய படங்களாக இருந்தாலும், அது நல்லபடம் என்று தெரிந்தால் மனமாற பாராட்டுவதோடு அதை பொதுவெளியில் கொண்டாடித் தீர்த்துவிடுவார் இயக்குநர் வசந்தபாலன். அப்படியொரு ரசனையான இயக்குநரான அவர், ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள 'சர்வம் தாளமயம்' படத்தைப் பாராட்டியுள்ளார்.
டிசம்பர் வெளியீடாக 'சர்வம் தாளமயம்' படம் திரைக்கு வரவுள்ளது. அண்மையில் நடைபெற்ற 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், நல்ல பாராட்டுகளைப் பெற்றது. முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர் கும்ப்ளே, இயக்குநர் பாலா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்ட தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் படத்தைத் திரையிட்டுக் காட்டினார் ராஜீவ் மேனன். 'சர்வம் தாளமயம்' படத்தைப் பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். இப்படம் தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஷயங்கள் சர்வம் தாளமயம் படம் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது.
ஜீ.வி.யின் அன்பு அழைப்பின் பேரில் 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தைக் காண வாய்ப்பு கிட்டியது. இசைத் திரைப்படங்கள் மீது எனக்கு அலாதியான பிரியம். 'WHIPLASH' என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மீது எனக்கு தணியாத காதல் உண்டு. குரு, சிஷ்ய உறவை மையமாகக் கொண்டு ஒரு இசைப்படத்தை உருவாக்குவது மிகக் கடினமான காரியம்.
அப்படத்திற்கு கதை எழுத, ஆழமான இசையறிவு தேவை. இசைக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் மேனன், இந்தக் கதையை மிக அழகாக, ஆழமாக, நுட்பமாக, சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். நெடுமுடி வேணு, மிருதங்க வித்வானாக வாழ்ந்துள்ளார். தேசிய விருது காத்திருக்கிறது.
ஆயிரம் நமஸ்காரங்கள் வேணு சார். ஜீ.வி., தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞனாக தன் மெய் வருத்தி நடித்துள்ளார். அவர் கண்களில் தெறிக்கும் பதின்வயது குழப்பம், பதட்டம், தடுமாற்றம், அழுகை, வெறி, ஏக்கம், காதல், குருபக்தி இப்படி அத்தனை உணர்வுகளையும் திரையில் கடத்தியுள்ளார். ஜி.வி. தவிர இன்னொருவர் பீட்டராக வாழ்ந்திருக்க இயலாது.
ஏ.ஆர்.ஆர். நம்மை 'சர்வம் தாளமயம்' என்று இந்த உலகை நுண்ணிப்பாய்க் கேட்கச் செய்துள்ளார். சற்றே கண்ணை மூடினேன். உலகின் சப்தங்களை இதயத்தால் கேட்கத் தொடங்கினேன். மனசு சொன்னது 'சர்வம் தாளமயம்' .
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.