ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தன்னுடைய கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று சொல்லித்தான், நடிகை கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். அதேபோலத்தான், நடிகர் விஜய் நடித்து வெளியான 'சர்க்கார்' படத்திலும், அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், படம் வெளியான பின், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் பெரிதாக இல்லாததோடு, அவரை ஒரு பொம்மையாகத்தான் நடிக்க வைத்திருக்கின்றனர். இதனால், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோர் மீது கீர்த்தி சுரேஷ் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இனி நடிக்க இருக்கும் படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு படத்தில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளப் போகிறாராம். அதற்காக, படம் தயாரிக்கத் துவங்கும் முன்பே, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம், அதற்கான உறுதிமொழியையும் எழுதி வாங்கிக் கொள்வது குறித்தும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.