ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்த் திரைப்பட இயக்குனர்களான பா.ரஞ்சித், கோபி நயினார் ஒரே சமயத்தில் பழங்குடியின மக்களுக்காகப் போராடிய பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போவதாக அறிவித்தனர். இருவரும் ஒருவரைப் பற்றிய படத்தை ஒரே சமயத்தில் எடுக்கப் போவதாக அறிவித்தது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியது.
கோபி நயினாரின் 'கருப்பர் நகரம்' படம்தான் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'மெட்ராஸ்' படமாக உருமாறியது என்ற சர்ச்சை இன்னும் முற்றுப் பெறாமல் இருக்கிறது. இருப்பினும் பிர்சா முண்டா படம் பற்றிய சர்ச்சைக்கு கோபி நயினாரால் முற்றுப் புள்ளி வைக்க ஆசைப்படுகிறார். பிர்சா பற்றிய படத்தை ஒரே சமயத்தில் இருவர் மட்டும் எடுத்தால் போதாவது இன்னும் பலரும் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே பிர்சா முண்டா பற்றி இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து ரஞ்சித்தும், கோபியும் எப்படி மாறுபட்டு அவர்களது படங்களைக் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.