ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் சுமார் 300 எபிசோடுகளில் நடித்தவர் அமுதவாணன். அதன்பிறகு சினிமாவில் இருந்து வாய்ப்புகள் வந்ததால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் அது இது எது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இதுகுறித்து அமுதவாணன் கூறுகையில், எனக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்ததே அது இது எது நிகழ்ச்சிதான். அதன்மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானேன். ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொருவிதமான கெட்டப்பில் தோன்றி திறமையை வெளிப்படுத்தி வந்தேன்.
அப்படி கிடைத்த புகழ் காரணமாக பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து தொடர்ந்து சில படங்கள் கிடைத்ததால் நிகழ்ச்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. சமீபத்தில் வெளியான பில்லா பாண்டி படத்திற்கு பிறகு கடம்பன் பார்வை உள்பட சில படங்களில் நடிக்கிறேன்.