ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் 1980களின் காலம் பொற்காலம். அந்தக் காலத்தில் சினிமா அடுத்து கட்டத்துக்கு சென்றது. காதல், மனித உறவுகள் என வித்தியாசமான கோணத்தில் சென்றது. வண்ணப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துவிட்ட அந்த நேரத்தில் அறிமுமான நடிகர்கள், நடிகைகள் அனைவருமே மக்களால் கொண்டாடப்பட்டவர்கள். 80களில் அறிமுகமானவர்களில் 50 சதவிகிதம் இன்னும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நடிகை சுஹாசினி, குஷ்பு, மோகன்லால், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட அன்றைய பல நட்சத்திரங்கள் இணைந்து 80களின் கிளப் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். அதன்படி, ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நாள் 80களில் சினிமாவில் வலம் வந்தவர்கள் சந்தித்து பேச வேண்டும் என்பது ஏற்பாடு.
அதன்படி, 9வது ஆண்டாக 80களின் நாயகர்களும், நாயகிகளும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்தார்கள். தங்களுக்குள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக அந்த இரவு கழிந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஷாக்கி ஷெராப், மோகன்லால், ஜெயராம், அர்ஜூன், ராஜ்குமார், கே.பாக்யராஜ், சரத்குமார், பானுசந்தர், சத்யராஜ், சுமன், ரகுமான் ஆகியோரும், நடிகைகள் நதியா, அம்பிகா, சுஹாசினி, மேனகா, லிசி, இந்தி நடிகை பூனம், குஷ்பு, ராதா, ஷோபனா, பூர்ணிமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.