ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் ஒளிப்பதிவாளர் டி.எஸ்.விநாயகம். குன்றத்தூர் அருகே உள்ள பூந்தண்டலம் கிராமத்தில் பிறந்து, சினிமா ஆர்வத்தில் சினிமாவுக்கு வந்து முதல் கமர்ஷியல் கேமராமேனாக வளர்ந்தவர். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர். பின்னர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படங்களில் பணியாற்றினார். சிவாஜி நடித்த, பைலட் பிரேம்நாத், வாழ்க்கை, ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா, மனிதன், உயர்ந்த உள்ளம் ஆகியவை முக்கியமான படங்கள்.
78 வயதான டி.எஸ்.விநாயகம், வடபழனி கங்கையம்மன் கோவில் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விநாயகம், நேற்று காலை 9 மணிக்கு காலமானார். அவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும் ரவிராஜ், பார்த்திபன் என்ற மகன்களும் உள்ளனர். டி.எஸ்.விநாயத்தின உடல் அடக்கம் நாளை அவரது சொந்த கிராமத்தில் நடக்கிறது. விநாயகத்தின் உடலுக்கு நேற்று திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.