ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி', 'பாகுபலி-2' என அடுத்தடுத்து சரித்திரம் படைத்த வெற்றிப் படங்களைக் கொடுத்த தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்து இயக்கும் படம் எது என்பதே ரசிகரக்ள் மற்றும் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
'பாகுபலி-2' படத்தை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா இருவரையும் வைத்து ராஜமவுலி இயக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் துவக்க விழா நேற்று பூஜையுடன் ஐதராபாத்தில் நடைபெற்றது.
சிரஞ்சீவி இந்த விழாவில் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ராஜமவுலி, ராம்சரண் தேஜா, ராமராவ் ஆகிய பெயர்கள் 'R' எழுத்தில் துவங்குவதால் இந்த படத்திற்கு 'RRR' என்று தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர்.
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். 11-வது மாதத்தில் 11-ஆம் தேதி 11.11 மணிக்கு படம் துவங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் இயக்குனர் ராஜமவுலி டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி இப்படத்தின் துவக்க விழா அதே நேரத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.