ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்க முயற்சி செய்யும் டெரர் போலீஸ் கான்ஸ்டபிள் சகாதேவனாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் கலாபவன் சாஜன். தற்போது, ரஜினி - அக்சய் இணைந்து நடித்துள்ள '2.O' படத்தில் முக்கிய வேடத்தில் இவரை நடிக்க வைத்துள்ளார் ஷங்கர். குறிப்பாக இந்தப்படத்தில், அக்சய் குமாருடன் இணைந்து சில காட்சிகளில் நடித்துள்ளார் கலாபவன் சாஜன்.
படப்பிடிப்பு சமயத்தில் அக்சய் உடன் சேர்ந்து செல்பி எடுக்க விரும்பினார் கலாபவன் சாஜன். ஆனால் அக்சய் மேக்கப் போட்டிருந்தபடியால் சாஜனின் ஆசையை உடனே நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்து மேக்கப்பை கலைத்ததும், உடனே ஞாபகமாக சாஜனை தானே அழைத்து செல்பி எடுத்துக்கொண்டாராம் அக்சய். அவரது பெருந்தன்மை கலாபவன் சாஜனை நெகிழ வைத்து விட்டதாம்.