ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். தற்போது கொம்புவச்ச சிங்கம்டா என்ற படத்தை இயக்குகிறார். இதில் சசிகுமார், மடோனா செபாஸ்டின், கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெரடி, ஸ்ரீபிரியங்கா, துளசி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். திபு நைனன் தாமஸ் இசை அமைக்கிறார். படம் பற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியதாவது:
இது 1990 முதல் 1994வரையிலா 4 ஆண்டுகளில் நடக்கும் கதை. மதுரை அருகில் உள்ள சிறு நகரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன். அந்த சம்பவம் என்ன? எந்த ஊர் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. படத்திலும் நேரடியாக குறிப்பிடப்பட்டிருக்காது. 1990 காலகட்டத்திய காட்சிகளுக்காக அப்போதுள்ள உடைகள், சினிமா போஸ்டர்கள், பணம் உள்ளிட்டவையை சேகரித்து வருகிறோம். என்றார்.