மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பட நாயகி ஸ்ருதி ஹரிஹரன் சொன்ன மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக தயாரிப்பாளர் சங்கம் எடுத்து முயற்சி பலனளிக்கவில்லை.
அதையடுத்து ஸ்ருதி மீது ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக சொன்னார் அர்ஜூன். ஆனபோதும் ஸ்ருதிஹரிஹரன் பணியவில்லை. தனது சார்பில் அர்ஜூன் மீது வழக்குத் தொடர்ந்தார்.
இந்த நிலையில், அர்ஜூன் கைது செய்யப்படுவார் என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால் அவரை நவம்பர் 14-ந்தேதி வரை கைது செய்ய பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்தது. அதையடுத்து பெங்களூர் காவல் நிலையத்துக்கு சென்று, நிபுணன் படப்பிடிப்பில் இருந்தபோது ஸ்ருதி ஹரிஹரனிடம் தான் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று விளக்கமளித்தார் அர்ஜூன்.
அவரைத் தொடர்ந்து தற்போது ஸ்ருதி ஹரிஹரனும் காவல் நிலையம் சென்று விளக்கம் அளித்துள்ளார். அப்போது நடந்த சம்பவங்களை போலீஸ் முன்பு கூறிய ஸ்ருதி, அர்ஜூனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்திருக்கிறார்.