ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்துள்ள சர்கார் படம். முழுக்க முழுக்க அரசியல் பேசுகிறது. குறிப்பாக இன்றைய அரசியல் நிலவரத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும், மற்றொருபுறம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.
இந்நிலையில் சர்கார் படம் தொடர்பாக விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது : சர்கார் படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ந்து வரும் நடிகரான விஜய், இதுபோன்று நடித்திருப்பது நல்லதல்ல என கூறியுள்ளார்.
ஹெச்.ராஜா சூசக விமர்சனம்
பா.ஜ.வின் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது : "படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா, நல்ல கதையா திருடுங்கடா". விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி உள்ள படம் சர்கார். இப்படம் தான் சமீபத்தில் கதை திருட்டு பிரச்னையில் சிக்கியது. அப்படி பார்க்கையில் இவரின் பதிவு, சர்கார் படத்தை குறிப்பதாகவே தெரிகிறது.