ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 64-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு ஏராளமான பேர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
நான் பிறந்தநாள் வாழ்த்து கேட்பதை விட தமிழகத்திற்கு விரைவில் நல்ல பிறந்தநாளாக அமையும். அரசியல் மாற்றத்தை மக்கள் நீதி மையம் தரும். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என உறுதியாக கூற முடியாது. அப்படி நடக்குமானால் அதை சந்திக்க தயாராக உள்ளோம். 20 தொகுதிகளிலும் 80 சதவீத களப்பணியாளர்கள் தயாராக உள்ளனர். தேர்தலின் போது பணம் கொடுக்கும் முறையை தடுக்க மக்களை சந்திப்பேன்.
ஊழலற்ற சுகாதாரமான அரசியல் இருக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. நான் எந்த கட்சிக்கும் குழலோ, ஊது குழலோ கிடையாது. நான் மக்களின் கருவி
நம் நாட்டில் ஜனநாயகம் சரியில்லாத போது மற்ற நாட்டை குறை சொல்வது சரியாக இருக்காது. இருந்தாலும் இலங்கையில் விரைவில் ஜனநாயகம் மலரும் என நம்புகிறேன்.
இவ்வாறு கமலஹாசன் பேசினார்.