ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின் மொழி. ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த தும்ஹரி சுலு படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக விதார்த் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது ஜோதிகா பேசும்போது, நான் மூன்று தமிழ் நடிகர்களுடன் நடிக்கும்போது மட்டும் மிகவும் செளகரியமாக உணர்வேன் என்று சொன்னவர், சூர்யா, அஜீத், மாதவன் என்று அந்த மூன்று ஹீரோக்களின் பெயரை சொன்னார்.
ஆனால், ரஜினி, கமல், விஜய், விக்ரம், சிம்பு என மேலும் பல ஹீரோக்களுடனும் ஜோதிகா நடித்துள்ள போதும் இந்த மூன்று ஹீரோக்களுடன் நடிக்கும்போது மட்டும் செளகரியமாக உணர்ந்தேன் என்று அவர் சொன்னதை மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதமாக்கி வருகிறார்கள்.