ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை உயர்த்துவதற்காக தான் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி தருவதாக இளையராஜா தயாரிப்பாளர் சங்கத்திற்கு உறுதிமொழி அளித்திருந்தார். இளையராஜா குறிப்பிட்ட அந்த இசை நிகழ்ச்சியை அவரது 75வது பிறந்த நாளுடன் நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருக்கிறது.
இந்த இசை நிகழ்ச்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3ந் தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இளையராஜா 75 என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதுவரை இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சிலேயே இது பிரமாண்டமானதாக இருக்கும் என்கிறார்கள். இந்த நிகழ்ச்சியையட்டி இரண்டு நாட்களும் படப்பிடிப்பை நிறுத்தி வைக்க தயாரிப்பாளர் சங்கம் தனது உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நமது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசைஞானி இளையராஜா அவர்களின் 75வது பிறந்த நாளை வருகிற 2019-பிப்ரவரி-2 மற்றும் 3ம் தேதிகளில் இசையராஜா-75 என்ற பெயரில் மாபெரும் இசை மற்றும் கலைநிகழ்ச்சியாக இந்திய அளவில் வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். எனவே அன்றைய தினத்தில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள். ஆகையால் நமது சங்க உறுப்பினர்கள் வருகிற 2019-பிப்ரவரி-2 மற்றும் 3ம் தேதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடவேண்டாம் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.