ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை: தமிழ் சினிமா உலகில் ஹாலிவுட் படங்களைப் பார்த்து காப்பியடித்து படங்களை இயக்கும் இயக்குனர்கள் ஒரு பக்கம். இதற்கு முன் வந்த படங்களில் இருந்து ஆங்காங்கே உருவி, ஒட்டி, உருமாற்றி, படமாக்குவோர் இன்னொரு பக்கம். இப்போது மூன்றாவதாக ஒரு கோஷ்டி. அது தான். அப்பாவி உதவி இயக்குனர்களின் கதைகளைத் திருடி படங்களை எடுப்பது.
தீனா முதல் சர்கார் வரை
ஏ.ஆர்.முருகதாஸ் கதைத் திருட்டு என உதவி இயக்குனர்களின் வாட்ஸ்அப் குழுக்களில் சில தகவல்கள் சில நாட்களாக பரவி வருகின்றன. 'தீனா', நித்யகுமார் என்ற உதவி இயக்குனரின் கதை, 'ரமணா', நந்தகுமார் என்பவரின் கதை, 'கஜினி', ஹாலிவுட் படமான 'மொமென்டோ'வின் காப்பி,
'துப்பாக்கி', 'கணிதன்' படத்தை இயக்கிய சந்தோஷ், மற்றும் உதவி இயக்குனர்களான வாசு, பிரேம்குமார் ஆகியோரின் கதை, 'கத்தி', 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார், 'தாகபூமி' என்ற குறும்படத்தை இயக்கிய அன்பு ராஜசேகர் ஆகியோரின் கதை, 'ஸ்பைடர்', கதை, தெலுங்கு உதவி இயக்குனரான சாம்சன் என்பவரது கதை, 'சர்கார்', வருண் ராஜேந்திரனின் கதை என இதுவரை முருகதாஸ் இயக்கிய படங்களின் கதைகள் அனைத்துமே திருடப்பட்டவை என்கிறது அந்த வாட்ஸ்அப் தகவல்.
பிரமாண்ட பிரச்னையான கத்தி, சர்கார்
'கத்தி' விவகாரத்தில் 'தாகபூமி' குறும்படத்தை இயக்கிய அன்பு ராஜசேகரைவிட கோபி நயினார் பல பேட்டிகளைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். வழக்கும் தொடர்ந்தார். இன்று வரை வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே, கோபி நயினார் முதலில் எடுத்த 'கருப்பர் நகரம்' என்ற படத்தின் காப்பி தான் பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' படக்கதை என்ற குற்றச்சாட்டு உள்ளது தனிக் கதை.
'சர்கார்' கதை பற்றிய சர்ச்சை அதிகமானதும் தான் 'தாகபூமி' குறும்படத்தை இயக்கிய அன்பு ராஜசேகர் பேசப்பட்டார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம், உண்ணாவிரதம், மீடியாக்களில் பேட்டி என அவர் மீண்டும் 'கத்தி' பட சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார். 'கத்தி' படத்தின் கதைக்கு அன்பு, கோபி என இருவர் உரிமை கோருகிறீர்களே என அன்புவிடம் கேட்டால் ஒருவன் இரண்டு வீட்டில் இருந்து திருடக் கூடாதா என பதிலளிக்கிறார்.
பாக்யராஜ் ராஜினாமா
வருணுக்கு 30 லட்சம் வழங்கப்பட்டது என தகவல் பரவி வருகிறது. எழுத்தாளர் சங்கத்தில் சுமூகமான உடன்பாட்டுக்கு வர மறுத்த ஏஆர்.முருகதாஸ், நீதிமன்றத்தில் சமரச உடன்பாடு பற்றி தெரிவித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளம்பும் கதை திருட்டு புகார்கள்
96 சர்ச்சை
சுப்ரமணியபுரம் சர்ச்சை
முன்னாள் இயக்குனர் ஒருவர் கூறுகையில், ''தமிழில் எப்போதும் இல்லாத வகையில் இப்போது தான் அதிக அளவு, கதைத் திருட்டு புகார்கள் வருகின்றன. இது இயக்குனர்களின் படைப்பாற்றல் குறைந்து வருவதையும், எதையாவது செய்து வெற்றி பெற வேண்டும்'' என்ற அவர்களது குறுகிய நோக்கத்தையுமே காட்டுகிறது'' என்றார்.