ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் கதை விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி சில தினங்களுக்கு முன்பு தீர்ந்தது. இந்த விவகாரத்தில் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான பாக்யராஜ், எந்தவித அச்சமும் இல்லாமல் செயல்பட்டது அந்த சங்கத்து உறுப்பினர்கள், பல உதவி இயக்குனர்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது.
அதே சமயம் அந்த சங்கத்தில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் பாக்யராஜை கடுமையாக நிர்பந்தப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினரான வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்க அந்த நிர்வாகிகள் மறுத்துள்ளார்கள். அதோடு சங்கத்தில் நடைபெற்ற சில முக்கிய பேச்சு வார்த்தைகளை எதிர் தரப்புக்கும் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் பாக்யராஜ் கடுமையான கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்.
விவகாரம் சுமூகமாக முடிந்த பின் பல உதவி இயக்குனர்கள் பாக்யராஜைத் தொடர்பு கொண்டு அவர்களது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் பாக்யராஜ் இன்று திடீரென சங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவர் பதவியில் அமர அவர் முடிவெடுத்துள்ளார்.
அதேசமயம் பாக்யராஜின் விலகலுக்கு என்ன காரணம் என விசாரித்த போது, 'சர்கார்' விவகாரத்தில் பாக்யராஜிற்கு முட்டுக் கொடுத்த சில நிர்வாகிகள்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அதைத்தான் பாக்யராஜ் விலகல் அறிக்கையிலும் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என்கிறார்கள்.
இதனிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை எடுத்த படங்கள் யாருடைய கதைகள் என உதவி இயக்குனர்கள் வட்டார வாட்ஸப் குழுக்களில் வேகமாக பரவி வருகிறதாம்.