ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்க்கார் படத்தின் கதை, பல வருடங்களுக்கு முன்பு தான் எழுதிய செங்கோல் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு வருண் என்கிற ராஜேந்திரன் சர்ச்சையை கிளப்பினார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. சர்க்கார் படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்ட நிலையில் சமரசம் மேற்கொள்ளப்பட்டது. வருண் ராஜேந்திரன் பெயரை சர்க்கார் படத்தின் டைட்டிலில் போட முருகதாஸ் ஒப்புக்கொண்டார். வருண் ராஜேந்தினுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் திரையுலகில் தற்போது புதிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. பல வெற்றி பெற்ற படங்களின் கதைகளை என்னுடைய கதை என்று உரிமை கோரி பலரும் கிளம்பி இருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் கதை என்னுடைய கதை என்று வெற்றி மகாலிங்கம் என்ற இயக்குனர் உரிமை கொண்டாடி பிரச்சனையைக் கிளப்பி வருகிறார். அந்த இயக்குனர் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.
இவரைப்போலவே வேறு சிலரும் வெற்றி பெற்ற பல படங்களின் கதைகள் மீது உரிமை கொண்டாடி பிரச்சனைகளை தொடங்கியிருக்கிறார்கள். பாக்யராஜ் நல்லது செய்யப்போய், இப்போது பூமராங் ஆகி அவர் பக்கமே திரும்பியுள்ளது.
பலரும் பாக்யராஜை அணுகி பஞ்சாயத்து செய்ய அழைக்க ஆரம்பித்தால் என்ன மாதிரி விளைவை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.