ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
'சிங்கம்' பட சீரிஸை தொடர்ந்து இயக்குநர் ஹரி மற்றும் சூர்யா மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளனர்.
ஹரி - சூர்யா கூட்டணியில் இதுவரை 'வேலு', 'ஆறு', 'சிங்கம் 1, 2, 3' ஆகிய படங்கள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து, மீண்டும் இருவரும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது கட்டாயம் 'சிங்கம்' படத்தின் வரிசை இல்லை எனவும் கூறப்படுகிறது.
முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'சூர்யா 37', 'இறுதிச்சுற்று' சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூர்யா 38' ஆகிய வரிசையில் 'சூர்யா 39'வது படமாக ஹரி இயக்கும் திரைப்படம் அமையும் என தெரிகிறது.