ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திருநெல்வேலி படத்தில் அறிமுகமானவர் உதயா. பிரபு அந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து 18 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது உத்தரவு மகாராஜா என்ற படத்தில் மீண்டும் பிரபுவுடன் இணைந்து நடித்துள்ளார் உதயா. இந்த படம் நவம்பர் 16-ந்தேதி திரைக்கு வருகிறது. அதேநாளில் ஜோதிகா நடித்துள்ள காற்றின்மொழி உள்பட மேலு சில சிறிய படங்களும் வெளியாக உள்ளது.
இதற்கிடையே திடீரென்று ஜெயம் ரவியின் அடங்க மறு, விஜய் சேதுபதியின் சீதக்காதி போன்ற படங்களையும் இதே தேதியில் வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக நேற்று உத்தரவு மகாராஜா படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றபோது தெரிவித்தார் நடிகர் உதயா.
அதுகுறித்து அவர் கூறுகையில், இந்த உத்தரவு மகாராஜா படத்தை நானே, தயாரித்து நடித்திருக்கிறேன். பிரபு, இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இது மீடியமான பட்ஜெட் படம். இந்த படத்தை நவம்பர் 16-ந்தேதி வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ஒப்புதல் பெற்று விட்டேன்.
ஆனால் இப்போது ஜெயம்ரவியின் அடங்கமறு, விஜய் சேதுபதியின் சீதக்காதி ஆகிய படங்களையும் அதே நாளில் வெளியிட தயாராகி வருவதாக சொல்கிறார்கள். நவம்பர் 16-ந்தேதி மீடியம் மற்றும் சின்ன படங்கள் வெளியிடுவதற்கு என்று தயாரிப்பாளர் சங்கமே ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பெரிய படங்களை வெளியிடுவது எங்களை ரொம்பவே பாதிக்கும்.
முக்கியமாக தியேட்டர்கள் கிடைக்காது என்று கூறிய உதயா, தயவுசெய்து அடங்கமறு, சீதக்காதி படங்களின் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்தார்.