மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
வடசென்னை படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அதேநேரம் அந்தப் படத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. குறிப்பாக வட சென்னையில் வாழும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த அமைப்புகள், வடசென்னை படத்துக்கு எதிராக கடுமையாக போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் வெற்றிமாறன். அவருக்கு எதிராகப்போராடுவது மட்டுமல்ல வெற்றிமாறன் தொலைபேசி மிரட்டல்கள் வருகிறதாம். பிரபல இயக்குனர் ஒருவர் இதற்கு பின்னால் இருப்பதாக வெற்றிமாறனுக்கு தெரிய வந்திருக்கிறது.
இத்தனைக்கும் அவருடைய நெருக்கமான நண்பர்தான் அந்த இயக்குநர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட வெற்றிமாறன் அப்செட் ஆகி விட்டாராம். வடசென்னை படம் வெற்றி பெற்றதால் கலைப்புலி தாணு தயாரிப்பில் வடசென்னை-2 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன்.
தற்போது இப்படம் தொடர்பாக தனக்கு மிரட்டல்களும் எதிர்ப்புகளும் அதிகரித்திருக்கும் நிலையில் வட சென்னை படத்தை தற்போது இயக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.