ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்கார் கதை வருண் என்கிற ராஜேந்திரன் உடையது என முருகதாஸ் கோர்ட்டில் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள சர்கார் படம் நவம்பர் 6ம் தேதியன்று தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் கதை தன்னுடைய செங்கோல் படத்தின் கதை என வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாக்யராஜ் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். முருகதாஸ் இது என்னுடைய கதை தான் பிடிவாதமாக இருந்தார். தொடர்ந்து பாக்யராஜ், முருகதாஸ் இருவரும் மாறி மாறி பரபரப்பாக பேட்டி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் எழுத்தாளர்கள் சங்கம், பட தயாரிப்பு நிறுவனம், முருகதாஸ் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி கடந்தவாரம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் முருகதாஸ், சரண்டராகி உள்ளார். சர்கார் கதை வருண் ராஜேந்திரன் உடையது தான் என கோர்ட்டில் முருகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் டைட்டில் கார்ட்டில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்படும் என்றும், வருணுக்கு குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த விகாரத்தில் வருண் - முருகதாஸ் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
படம் திட்டமிட்டப்படி வருகிற நவ., 6-ம் தேதி தீபாவளி தினத்தில் ரிலீஸாக உள்ளது.