ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்த சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். பெரும் பொருட்செலவில் தயாராகி உள்ள இந்தப் படம் தீபாவளியையொட்டி வருகிற 6ந் தேதி வெளிவருகிறது.
இந்த நிலையில் "சர்கார் படத்தின் கதை எனது செங்கோல் என்ற கதை. அதை நான் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்" என்று துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதோடு சர்கார் படத்தின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த பிரச்சினையில் சர்கார் தன்னுடைய கதைதான் என்பதை நிரூபிக்க சர்கார் கதையை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்திடம் கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இரண்டையும் படித்து பார்த்த கே.பாக்யராஜ் இரண்டு கதையும் ஒன்றுதான், துணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று முறைப்படி கடிதம் கொடுத்து விட்டார். இது சர்கார் படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தை பார்க்காமல் ஸ்கிரிப்டை முழுமையாக படிக்காமல் எப்படி பாக்யராஜ் இப்படி ஒரு கருத்தை சொல்லாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.
இந்த நிலையில் கே.பாக்யராஜ் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் சர்கார் படத்தின் முழு கதையையும் அவரது பாணியில் சொல்லிவிட்டார். ஹீரோ என்ட்ரி சீனிலிருந்து கிளைமாக்ஸ் வரை அனைத்தையும் சொல்லிவிட்டார். இது படக்குழுவினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.