ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட சில பெண்கள் மீ டூ மூலம் பாலியல் புகார் கூறினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த புகார்கள் பொய்யாக புனையப்பட்டவை. சட்டப்படி சந்திப்பேன் என்று வைரமுத்து தெரிவித்தார். ஆனால் அவரது மகன்களும், பாடல் ஆசிரியர்களுமான கபிலன் வைரமுத்துவும், மதன் கார்க்கியும் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்தனர்.
தற்போது கபிலன் வைரமுத்து "அப்பா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மதன் கார்க்கியும் அப்பாவுக்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் லிங்கா படத்தில் இடம் பெற்ற "உண்மை ஒருநாள் வெல்லும்..." என்ற பாடலின் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
லிங்கா கதைப்படி ரஜினி மீது ஊரே பழிசொல்லி துரத்தும்போது அவர் தன் மனைவியுடன் கண்ணீருடன் ஊரை விட்டுச் செல்வார். அப்போது இந்த பாடல் ஒலிக்கும். பாடல் வரிகள் இதுதான்...
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன்பேர் சொல்லும்.
அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா.
பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும்.
அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே.
ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்.
நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.
சிரித்து வரும் சிங்கம் உண்டு.
புன்னகைக்கும் புலிகள் உண்டு.
உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு.
பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு.
பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும்
அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது.
கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன்.
கரையாதே கலங்காதே.