ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்கும் வகையில் இந்தக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு....
1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் உள் மற்றும் வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளில் CCTV கேமரா பொருத்த வேண்டும். அது வருகிற நவம்பர் 6 தீபாவளி தினத்திற்குள் பொருத்தப்பட வேண்டும்
2. பொருத்தப்பட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பதிவு செய்யப்படும்.
3. நவம்பர் 15ம் தேதிக்குள் CCTV கேமரா பொருத்தாத தியேட்டர்களுக்கு திரைப்படம் தரப்படமாட்டாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்களை தியேட்டர்களில் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்படுவர்.
5. ஒவ்வொரு முறை திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.
6. திரைப்படத்தினை காண வரும் பொது மக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்
7. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். மேற்படி விஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து, அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.