ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெட்ராஸ் படத்தில் கலையரசனுடன் அறிமுகமானவர் ஹரி. அந்தப் படத்தில் ஜானி கேரக்டரில் நடித்ததால் ஜானி ஹரி ஆனார். அதன் பிறகு கபாலி படத்தில் நடித்தார். அவர் நடித்திருந்த பரியேறும் பெருமாள், வடசென்னை, சண்டக்கோழி 2ம் பாகம் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தது. சண்டக்கோழி படத்தில் படம் முழுக்க வரும் அன்பு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது ஏராளமான படங்களில் நடித்து வரும் ஹரி அதுபற்றி கூறியதாவது:
இந்த ஆண்டு நிஜமாவே எனக்கு அருமையான ஆண்டு. அண்ணனுக்கு ஜே, பரியேறும் பெருமாள், வட சென்னை மற்றும் சண்டக்கோழி 2 என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி இருக்கு. நான்கு படங்களுமே வெவ்வேறு களம். அதனால் இந்த படங்களில் வேலை செய்தது நல்ல அனுபவமாக இருந்தது. இவ்வளவு பெரிய படங்களில் ஒரு முக்கியமான ரோல் கிடைக்கிறதெல்லாம் சாதாரணமான விசயமில்லை. இவை அனைத்திற்கும் காரணம் "ஜானி" தான். ஜானி மூலமாகத் தான் எனக்கு இங்கே வெளிச்சம் கிடைத்தது. எனக்கு இவ்வளவு பெரிய வாப்பினை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி, மாரி செல்வராஜ் ஆகியோருக்கும் எனது நன்றிகள் என்கிறார் ஹரி.