ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில நாட்களாக மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஆண்களை குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்களை நிலைகுலைய செய்து வருகிறது. இந்தநிலையில் மும்பையை சேர்ந்தவரும் தீபிகா படுகோனின் முன்னாள் மேனேஜருமான அனிர்பன் தாஸ் பிலா என்பவர் மீ டூ விவாகரத்தில் சிக்கி, தற்கொலைக்கு முயன்று போலீசாரால் காப்பற்றப்பட்டுள்ளார்.
க்வான் என்டர்டெய்ன்மென்ட் என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் போன்ற பாலிவுட் பிரபலங்களின் மேனேஜராக செயல்பட்டு வருகிறார். மேலும் தீபிகா படுகோன் நடத்தி வரும் லிவ் லவ் லாப்' என்கிற மனநல விழிப்புணர்வு அமைப்பிலும் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறாராம் இந்த அனிர்பன் தாஸ்.
கடந்த சில நாட்களாக மீ டூ மூலமாக பல பெண்கள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். இதனால் க்வான் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகும்படி மற்றொரு நிறுவனரால் இவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அதன் காரணமாக நவி மும்பையில் உள்ள வாஷி என்னுமிடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார் அனிர்பன் தாஸ். கடைசி நேரத்தில் இதை கவனித்த போலீசார் இவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர்.