ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் ஒரு ஸ்மார்ட் ஆன ஆக்சன் ஹீரோ என்றால் முதலிடத்தில் மகேஷ்பாபு தான் வருவார். அந்த அளவிற்கு அவர் தமிழ் ஹீரோக்களை விடவும் சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். சென்னையில் பிறந்து, படித்து வளர்ந்த மகேஷ்பாபு, தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'ஸ்பைடர்' படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் படுதோல்வி அடைந்தது.
அந்தப் படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் 'சர்கார்'. இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி பல புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. 'சர்கார்' டீசரைப் பார்த்தால் அந்தப் படம் மகேஷ்பாபுவுக்கு மிகவும் பொருத்தமான கதையாகவும், கதாபாத்திரமாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் 'கார்ப்பரேட் கிரிமினல்' என்றால் அது மகேஷ்பாபுவுக்கு அப்படியே பொருத்தமாக இருக்கும். விஜய்க்கு 'லோக்கல் கிரிமினல்' என்றால் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்தனர்.
மகேஷ்பாபுவை வைத்து 'ஸ்பைடர்' படம் எடுத்ததற்குப் பதில் 'சர்கார்' படத்தை எடுத்திருக்கலாம்.