ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள 'வடசென்னை' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் வடசென்னை வாழ் மக்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள பெண் கதாபாத்திரங்கள் கூட படத்தில் அசிங்கமான கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றன.
குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் ஒரு கெட்ட வார்த்தை இதுவரை எந்த ஒரு சினிமாவிலும் இடம் பெறாத ஒரு அசிங்கமான கெட்ட வார்த்தை. அந்த வார்த்தையை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள் என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் கூட அடிக்கடி கெட்ட வார்த்தைகளைப் பேசுகின்றன.
'வடசென்னை' என்றாலே இப்படிப்பட்ட மக்கள்தான் இருப்பார்கள் என்ற மோசமான முன்னுதாரணத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது என வடசென்னை வாழ் மக்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 'வடசென்னை' படத்தின் அடுத்த இரண்டு பாகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அவற்றில் இது போன்ற கெட்ட வார்த்தைகள் இருக்கக் கூடாது என்று பலரும் இப்போதே கோரிக்கை வைத்துள்ளார்கள்.