ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடித்த புலி படத்தை அடுத்து ஏற்கனவே தான் இயக்கிய இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை வடிவேலுவை வைத்து இயக்கினார் சிம்புதேவன். இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு, சிம்புதேவனுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு படப்பிடிப்பு நின்று போனது.
அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், அப்படம் கிடப்பில் கிடக்கிறது. அதனால் வெங்கட் பிரபு தயாரிப்பில் ஒரு படத்தை தற்போது இயக்கி வருகிறார் சிம்பு தேவன். இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களான ஜெய், மிர்ச்சி சிவா, வைபவ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சென்னை-28 விஜயலட்சுமியும் நடிக்கிறார்.
இந்த படத்தில் மொத்தம் 6 கதைகள் உள்ளதாம். அந்த 6 கதைகளிலும் ஒவ்வொரு ஹீரோ நடிக்கிறார்களாம். இதுகுறித்த தகவல்கள் மற்றும் படத்தின் டைட்டீல் விரைவில் வெளியாக உள்ளது.