சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள 'சண்டக்கோழி 2' படம் நாளை(அக்., 18) வெளியாகிறது. இப்படத்தை திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் திடீரென போர்க்கொடி உயர்த்தி சர்ச்சையை ஏற்படுத்தினர்.
சில திரைப்படங்கள் திருட்டுத்தனமாகப் படமாக்க உதவிய பத்து திரையரங்குகளுக்கு இனி படங்களைத் திரையிட கொடுக்க மாட்டோம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி, இன்று(அக்., 17) வெளியான 'வடசென்னை' படம் அந்த பத்து தியேட்டர்களில் திரையிடப்படவில்லை.
இவற்றில் இடம் பெற்ற கரூர், கிருஷ்ணகிரி, மாயவரம் ஆகிய தியேட்டர்கள் அடங்கிய திருச்சி, தஞ்சாவூர், சேலம் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இந்தப் பிரச்சினையை முதலில் எழுப்பினர். இப்படி புதிய படங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டால் அந்தத் தியேட்டர்களை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அந்த தியேட்டர்களை நடத்துபவர்கள் சங்கங்களின் வழியாக விஷால் நடித்துள்ள 'சண்டக்கோழி 2' படத்திற்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். இந்த விவகாரம் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதுமே நாளை 'சண்டக்கோழி 2' திரையிடப்பட மாட்டாது என்று தகவல் பரவியது. பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் பேசி பிரச்சினையை தற்போதைக்கு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
பைரசி எடுப்பதற்கு உடந்தையாக இருந்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என அதனால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் பல மாதங்களாக குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு பல தயாரிப்பாளர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தால் மீண்டும் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையே பிரச்சினை உருவாகும் நிலை ஏற்படும்.
விசாரித்துப் பார்த்ததில் விஷாலின் எதிர்தரப்பு கோஷ்டியினர் இதற்குப் பின்னணியில் செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடக்கலாம் என்கிறார்கள்.
இப்போதைக்கு பிரச்சினை முடிந்ததால் நாளை 'சண்டக்கோழி 2' திட்டமிட்டபடி வெளிவரும்.