ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குற்றம் கடிதல் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் பாவல், அதன் பிறகு மெட்ராஸ், மகளிர் மட்டும் படத்தில் நடித்தார். தற்போது வடசென்னை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இயக்குனராகும் கனவுடன் வந்து ஒரு படத்தையும் இயக்கினார். அந்தப் படம் வெளிவரவில்லை. அதனால் இனி நடிப்பை மட்டும் தொடர முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இயக்குனராக வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்ததால், ஒரு படம் இயக்கவும் செய்தேன். ஆனால் 2 மாதத்தில் படம் பாதியில் நின்று விட்டது. 3 மாதங்களுக்குப் பிறகு படத்தை இயக்கி முடித்தேன். அப்படத்தில் நான் நடிக்கவில்லை. அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.
இதன் பிறகு குற்றம் கடிதல் படத்தில் நடித்தேன். அதுவும் மகளிர் மட்டும் படமும் எனக்கு நல்லப் பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில், வடசென்னையில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கதையைப் பற்றியும், எனது கதாபாத்திரத்தைப் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு இயக்குநர் வெற்றி மாறன் மீது நம்பிக்கை இருக்கிறது. எனது நடிப்பைப் பார்த்து எனது கதாபாத்திரத்தை நீடிக்கச் செய்திருக்கிறார். மேலும், வெற்றி மாறன் என்னிடம் படம் இயக்குவதை பிறகு பார்த்துக் கொள். நடிப்பு உனக்கு நன்றாக வருகிறது என்று ஊக்குவித்தார்.
ஆகையால், இனிமேல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். வடசென்னையில் பவனுக்கு தம்பியாக சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மம்முட்டியுடன் பேரன்பு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்திற்காக காத்திருக்கிறேன்.