அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சென்னை : சின்ன சின்ன பிரச்சினைகளுக்குகூட படப்பிடிப்பை நிறுத்துவது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். நேற்றும் அப்படி ஒரு பிரச்சினை நடந்தது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திராவின் ஸ்டூடியோவில் ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்புக்கான சாதனங்களை அவுட்டோர் யூனிட்டை சேர்ந்தவர்கள் தனியார் வாடகை வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதற்கு படப்பிடிப்பு சாதனங்களை ஏற்றிச் செல்லும் பெட்போர்ட் யூனியனை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் வாகனத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்று வாதம் செய்தனர். இருதரப்பினருக்குமான மோதல் மற்ற படப்பிடிப்பு தளங்களுக்கும் பரவ அத்தனை படப்பிடிப்பையும் தொழிலாளர்கள் நிறுத்தினார்கள்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நடித்த அயோக்யா, காஞ்சனா 3, குருதி ஆட்டம் உள்பட சென்னையில் நடந்த சுமார் 20 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் தயாரிப்பாளர்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டதாக தெரிகிறது.
"பேசி தீர்க்க வேண்டிய சின்ன சின்ன பிரச்சினைகளுக்குகூட படப்பிடிப்பை நிறுத்துவதால் நஷ்டம் அடைவது தயாரிப்பாளர்கள்தான். ஆனால் வேலை நடந்தாலும், நடக்காவிட்டாலும் தொழிலாளர்கள் அவர்கள் முழு சம்பளத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள்" என்றார் நேற்று பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் ஒருவர்.