ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகத்திலும், ஆந்திர அரசியலிலும் தனிப் பெருமையுடன் விளங்கியவர் என்டிஆர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை 'என்டிஆர்' என்ற பெயரில் அவருடைய மகன் பாலகிருஷ்ணா தயாரித்து, 'என்டிஆர்' கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.
அந்தப் படத்திற்குப் போட்டியாக 'லட்சுமியின் என்டிஆர்' என்ற படத்தை இயக்கப் போவதாக ராம்கோபால் வர்மா ஏற்கெனவே அறிவித்து முதல் பார்வையையும் வெளியிட்டிருந்தார். ஆனால், ஒரு வருட காலமாக அந்தப் படத்தை அவர் ஆரம்பிக்கவில்லை. அடுத்த வாரம் அக்டோபர் 19ம் தேதி திருப்பதியில் இப்படத்தின் துவக்கவிழாவை வர்மா நடத்த உள்ளார்.
“லட்சுமியின் என்டிஆர் படத்தை ஆரம்பிக்கப் போவது சிலிர்ப்பாக உள்ளது. படம் ஜனவரி கடைசியில் வெளியாகும். 'என்டிஆர்' படம் லட்சுமி பார்வதி அவருடைய வாழ்க்கையில் நுழைந்ததும் முடிந்துவிடும். ஆனால், என்னுடைய 'லட்சுமியின் என்டிஆர்' லட்சுமி பார்வதி நுழைந்த பின் ஆரம்பமாகும். திருப்பதியில் நடைபெற உள்ள துவக்கவிழாவில் ஆச்சரியமான விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். 'லட்சுமியின் என்டிஆர்' படத்திற்குத்தான் என்னுடைய வாழ்க்கையில் நான் முதல் முறையாக துவக்க விழா நடத்துகிறேன். என்டிஆர் மீது நான் வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக திருப்பதி பாலாஜி காலடியில் இந்தப் படத்தை ஆரம்பிக்கிறேன்,” என ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.