ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களை அனுமதிக்கலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஒரு தரப்பினர் இதை வரவேற்றாலும் பெரும்பாலும் எதிர்ப்பே தெரிவித்து வருகின்றனர். கேரளா, தமிழகத்தில் போராட்டங்கள் நடக்க தொடங்கி உள்ளன. இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்ட வேண்டும் என நடிகர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கேரளாவை சேர்ந்த நடிகர் கொல்லம் துளசி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களை பாதியாக வெட்டி, ஒரு பாதியை டில்லிக்கும், மற்றொரு பாதியை கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும். நமது பாரம்பரியம் தெரியும், ஆகவே நமது பெண்கள் போக மாட்டார்கள் என நினைக்கிறேன் என கூறியிருக்கிறார்.
கொல்லம் துளசி ஏராளமான படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். தமிழில் விக்ரமின் சாமுராய் மற்றும் அருள் படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.