ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவின் டாப் 10 படங்களில் ஒன்று உதிரிப்பூக்கள். இந்தப் படத்தில் நடித்தவர் கன்னடத்தை சேர்ந்த அஸ்வினி. அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். ஒரு சில கன்னடப் படங்களில் நடித்தவர், கன்னட இயக்குனர் டி.எஸ்.ரங்காவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது பெங்களூரில் மகள் வீட்டில் பேரன் பேத்திகளுடன் வசித்து வருகிறார்.
அண்மையில் சென்னை வந்த அஸ்வினி. தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும், தனது குருவுமான மகேந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் கூறும்போது "சென்னைக்கு ஒரு வேலைகயாக வந்தேன். மகேந்திரன் சாரை பார்க்க வேண்டும்போல இருந்தது. என்னை குருவாக இருந்து நல்ல நடிகையாக மாற்றியவர் அவர். குடும்பத்திற்காக நடிப்பில் இருந்து விலகினேன். நல்ல கதைகள் வந்தால் மீண்டும் நடிப்பது பற்றிய யோசிப்பேன்" என்றார்.