ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்து வரும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அவரை அப்பா என்று தான் அழைக்கிறாராம். தனது மகள் சவுந்தர்யா டைரக்ஷ்னில் ரஜினி நடித்து வரும் படம் கோச்சடையான். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் ஆதி, ஷோபனா, சரத்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ருக்மணி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முதற்கட்ட சூட்டிங்கை லண்டனிலும், 2ம் கட்ட சூட்டிங்கை கேரளாவிலும் முடித்து திரும்பியுள்ளனர் கோச்சடையான் படக்குழுவினர்.
இந்நிலையில் படத்தின் டைரக்டர் சவுந்தர்யா தனது டிவிட்டர் வலைபக்கத்தில், கோச்சடையான் படத்தின் 2கட்ட சூட்டிங் அருமையாக முடிந்துள்ளது. சூட்டிங்கில் அருமையாக ஒத்துழைத்த தீபிகா உள்ளிட்ட எல்லோருக்கும் தனது நன்றியையும், அடுத்த கட்ட சூட்டிங் விரைவில் தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.
பதிலுக்கு தீபிகாவும் தனது ட்விட்டர் வலைபக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார். தங்களது டைரக்ஷ்னில்(சவுந்தர்யா) நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை வைத்து அருமையாக படம் இயக்கி வரும் சவுந்தர்யாவுக்கு எனது நன்றி. அப்பா ரஜினி, அம்மா லதா உள்ளிட்ட எல்லோரையும் மீண்டும் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.