ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், 'கயல்' ஆனந்தி, நடித்த 'பரியேறும் பெருமாள்' படம் சென்றவாரம் வெளியானது.
'பரியேறும் பெருமாள்' படம் முதலில் குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களிலேயே வெளியிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மேலும் சில தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
முதலில் சுமார் 120 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட, இப்படம் இப்போது மேலும் 15-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என்பதுதான் துரதிஷ்டம்.
120 தியேட்டர்களில் படம் ஓடினாலும் பெரும்பாலும் 1 காட்சி, 2 காட்சிகள் என்றே ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே அவர் போட்ட பணத்தை எடுப்பதற்கே பரியேறும் பெருமாள் படம் 3 வாரங்கள் தியேட்டர்களில் ஓட வேண்டும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.