ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விஜய், சமீபத்தில் நடந்த சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில், தமிழகத்தில் அரசியல் நிலவரம் குறித்து பேசியதோடு, தான் முதல்வரானால், ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்பேன், நடிக்க மாட்டேன், ஊழலை முழுமையாக ஒழிப்பேன் என்றும் சொல்லி, தமிழக அரசியல்வாதிகளை ரொம்பவே உசுப்பேத்தினார்.
இதில், ஆளும் தரப்பினர் நடிகர் விஜய் மீது கடும் கோபம் அடைந்தனர். நடிகர் விஜய்யை, அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், நடிகர் கருணாகரன், நடிகர் விஜய்யின் சர்க்கார் பட விழா பேச்சுக் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என கருணாகரன் பதிவிட, விஜய்யின் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் வசைபாட, கடுப்பாக இருந்தால் கம்முன்னு இருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என பதிவிட்டிருக்கிறார். மேலும் ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் கருத்துகளே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்து விடுகிறது என கூறியிருக்கிறார்.
இதற்கு விஜய் ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளங்களில் கொச்சையாகவும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால், எரிச்சல் ஆன நடிகர் கருணாகரன், தமிழகத்தை தூய்மைப்படுத்துவதற்கு முன், நடிகர் விஜய், தனது ரசிகர்களை சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டு, நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதமாகி இருக்கிறது.
கருணாகரன், விஜய் ரசிகர்களின் மோதல் உச்சக்கட்டத்தை எட்ட, கருணாகரனுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் போலீஸ் புகார் அளித்தார்.
போலீசில் புகார்
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் கருணாகரன். தன்னை மிரட்டியவர்களின் செல்போன் நம்பர்கள், யார் யார் மிரட்டினார்கள் போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.