ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டு வாய்ப்பு தராமல் தன்னை ஏமாற்றிவிட்டனர் என தெலுங்கு சினிமாவில் புயலை கிளப்பினார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் முருகதாஸ், ஸ்ரீகாந்த், லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டார்.
தெலுங்கு சினிமா தனக்கு கை கொடுக்காத நிலையில் தமிழ்நாட்டில் என்ட்ரியானார். தற்போது ஸ்ரீரெட்டி டைரி என்ற பெயரில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையிலேயே குடியேறி விட்டார் ஸ்ரீரெட்டி. இன்று தனது வீட்டிற்கு பால் காய்ச்சி, பசு மாடு, கன்றுக்கு பூஜை செய்து குடியேறி உள்ளார். இதை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீரெட்டியிடம் கேட்டபோது, சொந்தமாக வீடு வாங்கவில்லை. வாடகைக்கு தான் வசிக்கிறேன். முதன்முதலில் சென்னையில் குடியேறுவதால் பால் காய்ச்சி முறையாக சென்றேன். தற்போது தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன், இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் விஷாலை சந்தித்து உதவி கோர உள்ளேன். தமிழக மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் என்றார்.