பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |
பழம்பெரும் நடிகையும், பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சண்முகசுந்தரி. 40வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்த அவர் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவுக்கு நிறைய படங்களில் அம்மாவாகவும் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மிடில் க்ளாஸ் மாதவன் படத்தில் வடிவேலு குடித்துவிட்டு, சண்முகசுந்தரியை பார்த்து பேசும் அது வேற வாய்... இதுநாற வாய் என்ற காமெடி ரொம்ப பிரபலம்.
சமீபத்திய சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த சண்முகசுந்தரி நேற்று இரவு மரணம் அடைந்தார். மறைந்த அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகை சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2ம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா உள்ளிட்ட 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் டி.கே.கலா சினிமாவில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.