ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனுராக் காஷ்யப், யார் என்று சொன்னால் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் தெரியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், 'இமைக்கா நொடிகள்' படத்தின் வில்லன் என்று சொன்னால் உடனே தெரிந்து கொள்வார்கள். பாலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் நல்ல தமிழ்ப் படங்களின் காதலனும் கூட. தமிழில் நல்ல படங்கள் வரும் போதெல்லாம் அவற்றைப் பார்த்து தவறாமல் பாராட்டுவார்.
இந்த வாரம் வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' படத்தைப் பாருங்கள், ஆதரவு கொடுங்கள் என ஹிந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான் ஆகியோருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைப் பார்த்த இயக்குனர் அனுராக் காஷ்யப், 'இது என்ன படம் ?, இந்தப் படம் மும்பையில் சப்டைட்டிலுடன் ஓடுகிறதா' எனக் கேட்டிருந்தார். அவருக்குப் பலரும் பதில் சொல்லியிருந்தார்கள். மும்பையில் இந்தப் படம் ஓடும் தியேட்டரைப் பற்றி படத் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் அனுராக் காஷ்யப்பிற்கு பதிலளித்திருந்தார்.
தமிழ்த் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் 'பரியேறும் பெருமாள்' படம் பார்த்துவிட்டு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.