அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
ஓ காதல் கண்மணி, மெர்சல் படங்களில் நடிப்பதற்கு முன்பே நடிகை ஸ்ரீபிரியா இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்தவர் நித்யாமேனன். அதையடுத்து தற்போது பிராணா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யாமேனன் மட்டுமே ஒரேயொரு கேரக்டரில் படம் முழுக்க நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கில் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்திருப்பவர், தமிழில் மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்திலும் ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான த அயர்ன் லேடி படத்திலும் ஜெயலலிதாவாக நடிக்கிறார் நித்யாமேனன்.
ஆக, ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனன் நடிப்பதாக செய்திகள் வெளியானதில் இருந்து, இப்போது அதிரடியான கதையின் நாயகிக்கான கதைகள் வைத்திருக்கும் டைரக்டர்களும் நித்யா மேனனை சந்தித்து கதை சொல்லி வருகிறார்களாம்.
அந்த வகையில், கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பரபரப்பான கதையின் நாயகியாகியிருக்கிறார் நித்யா மேனன்.