ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழில், குத்து ரம்யா என்ற பெயரில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் தனது சொந்த மொழியான கன்னடத்தில் நடித்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் கிருஷ்ணா இவரது உறவினர். அதன் மூலம் இவரும் அரசியலில் குதித்தார். பார்லிமென்ட் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகவும் ஆனார். தற்போது காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவராக இருக்கிறார்.
திவ்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையான வார்த்தைகளால் அவதூறு செய்து வருவதாக அவர் மீது லக்னோவில் உள்ள கோமதி நகர் காவல் நிலையத்தில் ரிஸ்வான் அகமது என்ற வக்கில் புகார் கொடுத்துள்ளார். இந்த மனுவை கொண்டு போலீசார் திவ்யா மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.