ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' நவம்பர் 29-ஆம் தேதி வெளியாவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை முடித்துவிட்டு ரஜினி தற்போது நடித்து வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் 'பேட்ட' படத்தை தொடர்ந்து மீண்டும் அந்நிறுவனத்துக்கே கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரஜினி.
விஜய் நடிப்பில் 'சர்கார்' படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அந்தப்படத்தை முடித்துவிட்டு ரஜினி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
தை மாதம் பிறந்ததும் ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. 'எந்திரன்', 'பேட்ட' படங்களை தொடர்ந்து ரஜினி நடிப்பில் 'சன் பிக்சர்ஸ்' தயாரிக்கும் மூன்றாவது படம் இது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.
சர்கார் படத்தில் வாங்கிய சம்பளத்தைவிட, ரஜினி படத்தை இயக்க, ஏ.ஆர்.முருகதாஸ்க்கு பல கோடி கூடுதலாக சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.