ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள சில முன்னணி ஹீரோக்களுக்கு தமிழில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசையின் காரணமாக கடந்த ஆண்டு ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்' படத்தில் மகேஷ் பாபு, தமிழில் அறிமுகமானார். ஆனால், இருவருக்குமே தோல்வி தான் கிடைத்தது.
இப்போது, முருகதாசின் சிஷ்யரான ஆனந்த் சங்கர் 'நோட்டா' படம் மூலம் விஜய் தேவரகொன்டா-வை தமிழுக்குக் கொண்டு வருகிறார். இப்படத்தின் வெளியீடு அக்டோபர் 5 என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகரை தமிழுக்குக் கொண்டு வந்து குரு தோற்றாலும், அவருடைய சிஷ்யர் ஆனந்த் சங்கர் மற்றுமொரு தெலுங்கு நடிகரை கொண்டு வந்து வெற்றி பெறுவாரா என்பது தமிழ், தெலுங்குத் திரையுலகத்தின் கேள்வியாக உள்ளது.
தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் தேவரகொன்டா, இந்த 'நோட்டா' மூலம் அதிக வாக்குகுளைப் பெற்று வெற்றி பெறுவாரா.? என்பது இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும்.