ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய சொந்த முயற்சியில் இந்த அளவிற்கு வளர்ந்த ஒரு நடிகர் சிவபுத்திரன். திரையுலகில் நிதானமாக அடியெடுத்து வைத்து படிப்படியான வெற்றிகளைப் பெற்று இன்று உயர்ந்த ஐந்து நட்சத்திரங்களில் ஒருவராகவும் முன்னேறியிருக்கிறார். அவருடைய வளர்ச்சி பலருக்குப் பொறாமையை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள்.
குறிப்பாக சில வாரிசு நடிகர்களுக்கு சிவபுத்திரனின் இந்த அரசு வளர்ச்சியைக் கண்டு பொறாமை அதிகரித்துள்ளதாம். தாங்கள் இத்தனை வருடங்களாக திரையுலகத்தில் இருக்கிறோம், நமக்குக் கிடைக்காத வெற்றி அவருக்கு கிடைக்கிறதே என்ற மன உளைச்சலில் சிலபல வேலைகளை செய்வதாகச் சொல்கிறார்கள்.
அதனால் தான் சமீபத்தில் வந்த வெளிநாட்டு ராஜா படத்திற்கெதிராக பலவிதமான மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் உலகவிட்டார்களாம். அதில் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களின் பங்கும் இருக்கிறது என்கிறார்கள். ஒரு பக்கம் இப்படிப்பட்ட எதிர்ப்புகளை மீறி சிவபுத்திரன் வளர்ந்தாலும், அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சில திரையுலக நலம் விரும்பிகள் பேசி வருகிறார்கள்.