ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடி நடிகரான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். அதன்பிறகு மன்னாரு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு வாழ்க விவசாயி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார். இவர்களுடன் முத்துராமன், ஹலோகந்தசாமி, ஸ்ரீகல்கி, கவிஞர் விக்ரமாதித்யன் ஆகியோரும் நடிக்கிறார்கள். பி.எல்.பொன்னி மோகன் இயக்குகிறார். ஜெய் கிருஷ் இசை அமைக்கிறார். இரதன் சந்தாவத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும், இயக்குனருமான சசிகுமார் வெளியிட்டார். படம் குறித்து அப்புக்குட்டி கூறியதாவது: இந்த படத்தில் கதைதான் ஹீரோ. நான் ஹீரோ இல்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டம் நிறைந்த ஒரு விவசாயியாக நடிக்கிறேன். என்றார்.
இயக்குனர் பி.எல்.பொன்னிமோகன் கூறியதாவது: நீரின்றி, உணவின்றி, தொழில் இல்லாததால் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவிக்கும் விவசாயிகள் பிரச்னையை மையப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள படம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார்களின் கதை. சமீபகாலமாக விவசாயிகள் படும் துன்பத்தையும், துயரத்தையும், அவலத்தையும் படம் பிடித்துக் காட்டும். படப்பிடிப்பு, ராஜபாளையம், சொக்கம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார விவசாய கிராமங்களில் நடைபெற்றுள்ளது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.