ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட் திரையுலகில் உறவுகள் பிரிவதற்காகவே என்ற நினைப்புடனையே ஏற்படுத்திக் கொள்ளப்படுகின்றன போல. அந்த அளவுக்கு நேற்று வரை நண்பர்களாக இருப்பவர்கள் விடிந்தால் நீ யாரோ..நான் யாரோ என்று ஆகி விடுகின்றனர்.
கடந்த ஐ.பி.எல்., சீசனின் போது தீபிகா படுகோனே பெங்களூரு ராயல் சேலர்ஞ்சர்ஸ் விளையாடும் இடத்திற்கு எல்லாம் அந்த அணியின் உரிமையாளர் விஜய் மால்யாவின் மகன் சித்தார்த் மால்யாவுடன் ஜோடி போட்டு சென்று கலக்கிக் கொண்டிருந்தார்.
காலம் மாறிப் போச்சு..ஐ.பி.எல்.., சீசன் மாறிப் போச்சு அதனால் தீபிகாவின் நட்பு வட்டாரமும் மாறி விட்டது. சித்தார்த் மால்யாவுடன் ஸ்டேடியத்தில் ஹாட்டாக முத்தங்களை பறிமாறிக் கொண்டு கேமராக் கண்களை தங்கள் பக்கம் இழுத்த தீபிகா இப்போது சித்தார்த்துடன் பேசுவது இல்லை. உறவு கசந்து விட்டதாம்?! அதனால் இந்த முறை அவர் உற்சாகப் படுத்த இருப்பது கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியையாம். தீபிகாவை வரவேற்று இருப்பவர் ஷாருக்கான். இதற்காக மனாலியில் இருந்து தனி விமானம் மூலம் கோல்கட்டா டைந் ரைடர்ஸ் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார் தீபிகா.
இதில் என்ன விஷேசம், விஷயம் என்றால் லாஸ்ட் ஐ.பி.எல்., சீசனில் ஷாருக்குடன் சேர்ந்து கோல்கட்டா நைட் ரைடர்ஸ் டீமை ஊக்குவித்து உற்சாகப்படுத்தியவர் பிரியங்கா சோப்ரா.இப்ப ஜோடி மாறிப் போச்சு!! ஐ.பி.எல்., சீசன் மாதிரி.. நட்புக்கும் சீசன் போல..!