மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ்சினிமா வரலாற்றில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்றால் பாகுபலி- 2 படம்தான். இப்படம் தமிழகத்தில் சுமார் 150 கோடியை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் தலா 72 கோடி ஷேர் கொடுத்தது.
அதற்கு அடுத்து தமிழகத்தில் வசூல் சாதனை செய்த படம் மெர்சல். 120 கோடி வசூலித்து 60 கோடி ஷேர் கொடுத்தது. இந்நிலையில், பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'சீமராஜா' படத்தில் 14 ஆம் நூற்றாண்டில் நடக்கும் காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.
இந்தப் படத்தில் இடம்பெறும் பீரியட் காட்சிகளை டிரைலரில் பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் பண்ணினார்கள். சீமராஜா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், “இந்த டிரைலரின் கடைசி 3 ஷாட் பார்த்து, 'பாகுபலி மாதிரி இருக்கு' என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை” என்று சிவகார்த்திகேயன் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக சீமராஜா படத்தின் முதல்நாள் வசூல் பாகுபலி 2 படத்தின் முதல்நாள் வசூலைவிட அதிகம் என்று சிலர் சமூகவலைதளங்களில் செய்தி பரப்பி வருகின்றனர். படத்துக்கு பில்ட்-அப் கொடுக்க வேண்டியதுதான்... அதுக்காக இப்படியா?