சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஷ் சிவன், நேற்று இரவு தயாரிப்பாளர்களை கிண்டலடித்து டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கும் போது கோபமாக இருப்பதாகவும், ஹீரோயின்களுக்கு சம்பளம் வழங்கும் போது கொஞ்சலாக இருப்பதாகவும் நாய் படம் ஒன்றை வைத்து பதிவிட்டிருந்தார்.
சந்தோஷ் சிவனின் சர்ச்சை டுவீட் பற்றிய கருத்து தயாரிப்பாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் வரை சம்பளம், தனி கேரவன் என ஹீரோயின்களுக்கு கொடுக்கும் அளவிலான முக்கியத்துவம் அவருக்கும் தரப்பட்டு வரும் நிலையில் அவர் இப்படி பதிவிட்டிருப்பது குறித்து முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தியாகராஜன், தனஞ்செயன், மனோபாலா, தேனப்பன், ஜேஎஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்களாம்.
தயாரிப்பாளர்களுக்குள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பிலும் பல தயாரிப்பாளர்கள் இது குறித்து கொந்தளித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் இது பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.